தீப ஒளி அல்லது ஒளி வெள்ளத்தின் பேரணி என்ற பொருள் படும் தீபாவளி திருநாள், இந்தியாவின் முதன்மைக் கொண்டாட்டங்களில் ஒன்று. இந்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு மதத்தினரும் சிறப்புற கொண்டாடும் பண்டிகையாக இது திகழ்கிறது.